
அகமதாபாத் விமான விபத்தில் இறந்த துணை விமானி கிளைவ் குந்தர் மிகவும் புத்திசாலி மற்றும் ஒழுக்கமான மாணவர் என்று அவரது பேராசிரியர் ஊர்வசி கூறினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தவர்களில் 12 விமான ஊழியர்களும் அடங்குவர். இவர்களில் துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர்.