
உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் இருந்து கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டர், கவுரிகுந்த் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் விமானி உட்பட 7 பேர் பயணித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
விபத்தைத் தொடர்ந்து மீட்பு பணியில் உள்ளூர் நிர்வாகம் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் ஹெலிகாப்டரில் பயணித்த 7 பேரின் நிலை என்ன? என்பது குறித்து அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்த நிலையில் தற்போது அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் இறந்துவிட்டதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதில் விமானி மற்றும் 5 பெரியவர்கள், 1 குழந்தை இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கேதார்நாத் பள்ளத்தாக்கின் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.