
தமிழகத்தில் கடலூர், ஆம்பூர் நகரங்களில் தமாகா நிர்வாகிகளின் கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமான சொத்துகளை மீட்க தமிழ்நாடு காங்கிரஸின் சொத்து மீட்புக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும், மாவட்ட காங்கிரஸ் மற்றும் நகர காங்கிரஸ் சார்பில் ஏராளமான சொத்துகள் உள்ளன. அவற்றின் மூலம் வாடகையாக கட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் வருகிறது. பல சொத்துகள் யாரிடம் இருகிறது என்றே தெரியவில்லை. சில சொத்துகள் தனியாருக்கு விற்கப்பட்டும் உள்ளது.