
ராஜஸ்தானில் போலி மந்திரவாதிகள் கொடுத்த உணவுப்பொருளை சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து ரொக்கம் உட்பட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் நகரின் கஜுவாலா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கப்பார். ஷைத்தான் சிங் மற்றும் விக்ரம் சிங் ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை மந்திரவாதிகளை அழைத்துக் கொண்டு கப்பாரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். பிளாக் மேஜிக் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறிய அவர்கள் சில சடங்குகளை செய்துள்ளனர்.