
பாஜக தலைவரும், சமூக சேவகருமான பசுபதிநாத் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் கழிதது, 16 பேருக்கு ஆயுள் தண்டனையை வாராணசி நீதிமன்றம் வழங்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள சிக்ரா பகுதியைச் சேர்ந்தவர் பசுபதிநாத். சமூக சேவகரான இவர், பாஜக நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவரது மகன் ராஜ்குமார் சிங் (42). கடந்த 2022-ல் அப்பகுதியிலுள்ள சாராயக் கடையில் சிலர், தகராறில் ஈடுபட்டனர். அதை ராஜ்குமார் சிங் தட்டிக் கேட்டார். இதையடுத்து ராஜ்குமார் சிங்கை தாக்க ஒரு கும்பல் ஓடி வந்தது. இதைத் தொடர்ந்து தனது மகனைக் காப்பாற்ற பசுபதிநாத் ஓடினார். அந்த கும்பல், பசுபதிநாத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. மகனைக் காப்பாற்றும் முயற்சியில் பசுபதிநாத் உயிரிழந்தார்.