
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த சோதனையில் 328 துப்பாக்கிகள், 10,600 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி மற்றும் குகி பழங்குடியினத்தவர்கள் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறி பலர் கொல்லப்பட்டனர். அங்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது வன்முறை சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன.