
பொள்ளாச்சி அருகிலுள்ள சேத்துமடை கிராமத்தைச் சேர்ந்தவரான வேலு (சண்முக பாண்டியன்), அப்பா (கஸ்தூரி ராஜா), சகோதரியுடன் வசித்து வருகிறார். கூடவே 25 வருடமாக வளர்ந்து வருகிறது மணியன் என்ற யானையும்.
அதை தங்கள் வீட்டில் ஒருவராகப் பார்க்கிறார்கள் வேலு குடும்பத்தினர். ஒரு கட்டத்தில் யானையை ஒரு கும்பல் கடத்திச் சென்று விட, அதைக் கண்டுபிடிக்க செல்கிறார்கள், வேலுவும் அவர் நண்பர்களும். அந்த யானை கடத்தப்பட்டது ஏன்? அதைக் கண்டுபிடிக்கச் செல்லும் வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, யானையை மீட்டார்களா, இல்லையா? என்பது கதை.