
‘உடன்பிறப்பே வா’ எனும் நிர்வாகிகள் சந்திப்பு தொடங்கிய நிலையில், நேற்று 8 மண்டல பொறுப்பாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், ஆளும் திமுக, கடந்தாண்டிலிருந்தே தேர்தலுக்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டது. இதன் ஒரு பகுதியாக மதுரை பொதுக்குழு கூட்டத்தில் அறிவித்தபடி, ‘ உடன்பிறப்பே வா’ என்ற பெயரில், தொகுதிவாரியாக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வை நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கினார்.