
மதுரை: தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத அவல நிலை உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
மதுரை திருமங்கலம் அருகே சூறையாடப்பட்ட வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தை பார்வையிட சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீஸார் கைது செய்து, கல்லுப்பட்டி – பேரையூர் சாலையிலுள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தனர். அவரை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு சந்தித்தார்.