• June 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கடன் நிறுவனங்களின் வலுக்கட்டாய நடவடிக்கையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் சட்டம், உயிரி கழிவுகளை கொட்டுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 5 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதையடுத்து சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன.

கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் நிதி மசோதாக்கள் உட்பட 18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதிநாளான ஏப்.29-ம் தேதி நிறைவேற்றப்பட்டன. இவற்றில், நிதி மசோதாக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்ட மசோதாக்கள் உட்பட 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கெனவே ஒப்புதல் அளித்து, அவை அரசிதழில் வெளியிடப்பட்டு, அமலுக்கு வந்துவிட்டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *