
அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியாவின் தாய் நிறுவனமான டாடா குழுமம் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ பதிவில், “இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 241 பயணிகள் உயிரிழந்ததை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும், இந்த இழப்பால் மிகவும் துயரமடைந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக பிரார்த்திக்கின்றோம்.