• June 14, 2025
  • NewsEditor
  • 0

திருவள்ளூர்: வரும் சட்​டப்​பேரவை தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு கூடு​தல் இடம் திமுக வழங்​கும் என, அக்​கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் நம்பிக்கை தெரி​வித்​துள்​ளார். மத்​திய பாஜக அரசின் பல்​வேறு செயல்​பாடு​களுக்கு எதிர்ப்பு தெரி​வித்​தும், மக்​கள் நலன் சார்ந்த திட்​டங்​களை தமிழக அரசு செயல்​படுத்த வலி​யுறுத்​தி​யும் தமிழகத்​தில் கடந்த 11-ம் தேதி முதல், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்சி சார்​பில் மக்​கள்சந்​திப்பு பிரச்​சார இயக்​கம் நடை​பெற்று வரு​கிறது. அதன்​படி திரு​வள்​ளூர் மாவட்​டம், தாமரைப்​பாக்​கத்​தில் நேற்று நடந்தது.

இதில், கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், மாநிலக் குழு உறுப்​பினர் ஐ.ஆறு​முகந​யி​னார், மாவட்​டச் செய​லா​ளர் எஸ்​.கோ​பால், மாவட்ட செயற்​குழு உறுப்​பினர்​களான டி.பன்​னீர்​செல்​வம், ஜி.சம்​பத், ஏ.ஜி.கண்​ணன் உள்​ளிட்ட நிர்​வாகி​கள் பங்​கேற்​றனர். அப்​போது, செய்​தி​யாளர்​களிடம் பெ.சண்​முகம் தெரி​வித்​த​தாவது: அகம​தா​பாத் விமான விபத்​தில் பாதிக்​கப்​பட்ட குடும்​பங்​களுக்கு உரிய இழப்​பீடு வழங்​க​வும், காயமடைந்த மருத்​து​வக்​கல்​லூரி மாணவர்​கள் உள்​ளிட்​டோருக்கு உயர்தர சிகிச்சை வழங்​க​வும் மத்​திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்​கவேண்​டும். விபத்து தொடர்​பாக நேர்​மை​யான நீதி விசா​ரணை நடத்​தப்​பட​ வேண்​டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *