
அகமதாபாத்: மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உணவு சமைத்து கொடுத்து வந்த தனது தாய் மற்றும் 2 வயது மகள் ஆகியோர் விமான விபத்தில் காணாமல் போனதையடுத்து அவரது மகன் அவர்களை தேடி வருகிறார்.
ஷர்லாபென் தாக்குர் என்பவர் அகமதாபாத்தில் உள்ள பிஜே மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று உணவு கொடுப்பதற்காக அவரும் அவரது 2 வயது பேத்தியும் மருத்துவ மாணவர் விடுதிக்கு சென்றுள்ளனர்.