• June 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மெட்ரோ ரயில் மேம்பால தூண் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த விபத்துக்கு, இரும்பு உபகரணம் பொருத்த வைக்கப்பட்ட வெல்டிங்கில் உடைப்பு ஏற்பட்டதே காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி-போரூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், போரூர் அருகே மணப்பாக்கத்தில் உள்ள எல் அண்ட் டி தலைமை அலுவலக பிரதான வாயிலுக்கு அருகில் ஒரு வாரத்துக்கு முன்பு அமைக்கப்பட்ட 2 தூண்கள், அதன் இணைப்புப் பாலம் நேற்று முன்தினம் இரவு சரிந்து விழுந்ததால் இடிந்தன. இந்த விபத்தின்போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *