
புதுடெல்லி: சாலைகளில் ஓடும் வாகனங்களுக்கு இருப்பதை போல், விமானங்களுக்கான ஆயுட்காலம் விதிக்காதது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. குஜராத் விமான விபத்தை அடுத்து சாலை வாகனங்களுடன் ஒப்பிட்டு ஆயுட்காலம் மீதான விவாதங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
சுற்றுச்சூழலைக் கணக்கில் கொண்டு உச்ச நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை ஆணையத்தால் டீசல் வாகனங்களுக்கு 10 வருடமும், பெட்ரோல் வாகனங்களுக்கு 15 வருடங்கள் என ஆயுட்காலம் விதிக்கப்பட்டுள்ளது. இவை 2015 மற்றும் 2018 -ல் விதிக்கப்பட்டன. 10, 15 வருடங்களுக்கு பிறகும் சில வாகனங்கள் மாசுகட்டுப்பாடு விதிகளுக்கும் குறைவானப் புகைகளை வீசுகின்றன அந்த வாகனங்களுக்கும் சாலைகளில் ஓட அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்தவகையில், ஆகாயங்களில் பறக்கும் விமானங்களுக்காக எந்தவிதமான ஆயுட்காலமும் அரசு விதிக்கவில்லை எனத் தெரிகிறது.