
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் எடுக்கவிடாமல் வீட்டு வேலைகளை செய்ய கணவர் வற்புறுத்துவதாக பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவை சேர்ந்த விஜேந்திரா என்பவர், உத்திரபிரதேசத்தின் ஹாபூரைச் சேர்ந்த நிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். நிஷா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அதிகமான நேரம் இதற்கான செலவிட்டதையடுத்து, நிஷாவை இன்ஸ்டாகிராமில் செலவிடும் நேரத்தை குறைத்துவிட்டு வீட்டு பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்துமாறு கணவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தம்பதிகளுக்கு இடையே வெடித்த பிரச்னை, காவல் நிலையம் வரை சென்றிருக்கிறது.
அதாவது கணவரின் பேச்சைக் கேட்டு நிஷா சமூக வலைதளங்களின் பயன்பாட்டை சற்று குறைத்துக் கொண்டு வீட்டு வேலைகளை செய்துள்ளார்.
ஆனால் அவரின் இன்ஸ்டாகிராம் கணக்கிலிருந்து இரண்டு பாலோவர்ஸ் குறைந்ததை கண்டு கோபமடைந்த அந்த பெண் கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். கணவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
”என் கணவர் என்னை பாத்திரங்கள் கழுவுவதிலும், வீடு சுத்தம் செய்வதிலும் அதிகம் கவனம் செலுத்த சொன்னதால் instagramல் பின் தொடர்பவர்கள் குறைந்துவிட்டனர், எனக்கு ரீல்ஸ் எடுப்பதற்கு நேரமே கிடைக்கவில்லை என்று போலீசாரிடம் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.

இதற்கு நிஷாவின் கணவர், வீட்டு வேலைகளை புறக்கணித்து தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிட்டதாக எதிர்ப்பு புகாரும் கொடுத்துள்ளார்.
காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்ட தம்பதிகளுக்கு நான்கு மணி நேரம் ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.
திருமணத்தின் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் ஒரு வழக்கா? என்று யோசிக்கும் நேரத்தில் சமூக ஊடகங்கள் இன்று தனிப்பட்ட உறவுகளின் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.