
சிவகங்கை: நாட்டுப்புற பாடகரும், திரைப்பட நடிகையுமான கொல்லங்குடி கருப்பாயி உடல் நலக்குறைவால் இன்று (ஜூன் 14) காலமானார். அவருக்கு வயது 99.
சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடியைச் சேர்ந்தவர் கருப்பாயி (99). நாட்டுப்புற பாடகரான இவர், ‘ஆண் பாவம்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். ‘ஆயுசு நூறு’, ‘ஏட்டிக்கு போட்டி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த அவருக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1993-ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தார்.