• June 14, 2025
  • NewsEditor
  • 0

பிரிட்டனில் பணியாற்றி வந்த கேரள நர்ஸ் ரஞ்சிதா கோபக்குமார் (39) அங்கு வேலையை விட்டு விட்டு கேரளாவில் நிரந்தரமாக தங்க முடிவு செய்திருந்தார். அதற்கான வேலைகளை முடிப்பதற்காக ரஞ்சிதா, லண்டனுக்கு மீண்டும் செல்ல முடிவு செய்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் கூறும்போது, “லண்டன் வேலையை விட்டு விட்டு தென் கேரளாவில் உள்ள தனது சொந்த கிராமமான புல்லாட்டில் அவர் குடியேற முடிவு செய்திருந்தார். இதற்கா அங்கு புதிதாக வீடு கட்டவும் திட்டமிருந்தார். ஏராளமான கனவுகளுடன் இருந்தார். ஆனால், அவரே திரும்ப முடியாமல் போய்விட்டது. லண்டன் கிளம்பும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்" என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *