• June 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​திலிருந்து லண்​ட​னுக்கு நேற்று முன்​தினம் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயி​ரிழந்​தனர். இந்த விமான விபத்​தில் உயிர் பிழைத்​தவர் விஸ்​வாஸ் குமார் ரமேஷ் என்​பவர் ஆவார். அவர் அமர்ந்​திருந்​தது 11 ஏ என்ற எண்​ணுள்ள இருக்​கை​தான். இந்த இருக்​கை​யானது, ஐரோப்​பிய நாடு​களில் இயக்​கப்​படும் 737 வகை போயிங் விமானங்​களில் மிக​வும் வெறுக்​கப்​படும் இருக்​கை​யாகப் பார்க்​கப்​படு​கிறது. ஆனால், இந்​தி​யா​வில் இயக்​கப்​படும் 787 போயிங் விமானங்​களில் உள்ள 11 ஏ இருக்​கை​யானது அதிர்​ஷ்ட​மான இருக்​கை​யாகப் பார்க்​கப்​படு​கிறது.

போயிங் 787 விமானங்​களில் 11ஏ என்ற எண்​ணுள்ள இருக்​கை​யானது, பெரும்​பாலும், லக்​சரி வகுப்​புக்கு அடுத்​த​படி​யாக அமைந்​திருக்​கும். அதாவது எகானமி வகுப்பு தொடங்​கும் முதல் வரிசை​யில் முதல் இருக்​கை​யாக ஜன்​னலை ஒட்டி இந்த இருக்கை அமைந்​திருக்​கும். இந்த இருக்​கையை ஐரோப்​பிய விமானங்​களில் பெரும்​பாலானோர் விரும்​புவ​தில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *