
சென்னை: தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து விசைப்படகு மீனவர்கள் இன்று நள்ளிரவு கடலுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர்.
கடலில் மீன் வளத்தைப் பெருக்கும் விதமாக, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் வங்கக் கடலில், நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தமிழக கடலோரப் பகுதிகளில் 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.