• June 14, 2025
  • NewsEditor
  • 0

பாமக-வில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தம் நாளுக்கு நாள் வீரியமாகிக் கொண்டே போகிறது. ராமதாஸையும் அன்புமணியையும் சமாதானப்படுத்த பாஜக தரப்பில் ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனளிக்காத நிலையில், முக்கிய நிர்வாகிகள் உள்பட 45 பேரை பொறுப்புகளில் இருந்து நீக்கினார் ராமதாஸ். அவர்களில் சிலரை மீண்டும் பொறுப்பில் அமர்த்தி அதிரடி காட்டினார் அன்புமணி. கட்சிக்குள் நடக்கும் இந்த ஏட்டிக்குப் போட்டிகளை எல்லாம் பார்த்துவிட்டு, கீழ்மட்ட நிர்வாகிகள் பலரும் மாற்றுக் கட்சி முகாம்களுக்கு தூதுவிட தொடங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

​பாமக-​வில் அன்​புமணி​யின் ஆதிக்​கத்​தைப் பிடிக்​காமல் தான் பண்​ருட்டி வேல்​முரு​கன் உள்​ளிட்ட செல்​வாக்​கான மனிதர்​கள் கட்​சியை விட்டு வில​கி​னார்​கள். இதில், வேல்​முரு​கன் தமிழக வாழ்​வுரிமை கட்​சி​யைத் தொடங்கி தற்​போது திமுக கூட்​ட​ணி​யில் எம்​எல்​ஏ-​வாக​வும் இருக்​கி​றார். தந்​தைக்​கும் மகனுக்​கும் மோதல் வெடித்த சமயத்​தில், கட்​சியை பலப்​படுத்​து​வதற்​காக வேல்​முரு​கன், காடு​வெட்டி குரு​வின் மகன் உள்​ளிட்​ட​வர்​களை மீண்​டும் பாமக-வுக்​குள் கொண்​டுவர ராம​தாஸ் தரப்​பில் ஒரு மூவ் நடந்​த​தாகச் சொல்​கி​றார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *