
அகமதாபாத்: குஜராத் விமான விபத்தில் கனடாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் அவர், இந்திய வம்சாவளியை சேர்ந்த பல் மருத்துவர் நிராளி படேல் (32) எனத் தெரியவந்துள்ளது.
கனடாவில் ரொடன்டோ நகரின் எடோபிகோக் பகுதியில் நிராளி தனது கணவர் மற்றும் ஒரு வயது குழந்தையுடன வசித்து வந்தார். மிசிசாகா என்ற இடத்தில் உள்ள ஒரு பல் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். அவரது பெற்றோரும் சகோதரரும் பிராம்டன் நகரில் வசித்து வருகின்றனர்.