
சித்தூர்: கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து ஆந்திர அரசுப் பேருந்து ஒன்று நேற்று முன்தினம் இரவு பெங்களூரு நோக்கி சென்றது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்நிலையில் பெங்களூரு புறநகர் ஹொஸக்கோட்டை பகுதியில் ஒரு லாரி மீது இந்தப் பேருந்து மோதியது.
இந்த கோர விபத்தில் சித்தூர் மாவட்டம், கங்காதர நெல்லூர் பகுதியை சேர்ந்த ஒரு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் காயம் அடைந்தனர்.