
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக எந்த அடிப்படையில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரனிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது என்பது குறித்து பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இதுதொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களி்ல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் விக்ரம் ரவீந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.