
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய வழக்கில், மு.க.அழகிரி மகனின் மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, ஒலிம்பஸ் கிரானைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களான எஸ்.நாகராஜன் மற்றும் மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது 2012-ல் கீழவளவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.