
மதுரை: கோயிலுக்கு சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. கோயில் இடத்தை அடக்க ஸ்தலமாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.