
திருச்சி: உலகில் ஊழலற்ற ஆட்சி என்பது எங்கும் கிடையாது. ஆட்சி அதிகாரம் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்கும். ஆனால், அதைவிட மதவாதம், சாதியவாதம் தீங்கானது. அதைத்தான் முதலில் வீழ்த்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
வக்பு திருத்த சட்டத்தை கண்டித்தும், மத்திய அரசு சிறுபான்மையினர் விரோதப் போக்குடன் நடந்து கொள்வதாகக் கூறியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருச்சியில் இன்று (ஜூன் 14) மாலை பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க வந்துள்ள விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: