• June 14, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: என் மூச்சிருக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான்தான் தலைவர் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

திண்டிவனம் அடுத்த தைலாபுலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: என் மூச்சிருக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான்தான் தலைவர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தலைவர் பதவியை அவருக்கு (அன்புமணி) கொடுக்கிறேன் என்று கூறியதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். கடைசி வரை நான்தான் பதவியில் இருக்க வேண்டும் என்று 99 சதவீதம் பேர் கூறுகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *