
சென்னை: சென்னை, சேலம், நெல்லை என தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை செயலர் தீரஜ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த டிஐஜி மகேஷ்குமார், தமிழக கடலோர பாதுகாப்பு குழும டிஐஜியாகவும், அங்கிருந்த ஜெயந்தி காவல் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாகவும், சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராக இருந்த எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவன முதன்மை விஜிலென்ஸ் அதிகாரியாகவும், சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராக இருந்த பகர்லா செபாஸ் கல்யாண் சென்னை தெற்கு மண்டல இணை ஆணையராகவும் விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.