• June 13, 2025
  • NewsEditor
  • 0

அந்தவகையில் 2024-ம் ஆண்டிற்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்றது. இந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதை `வாழை’ படத்துக்காகப் பெற்றுக்கொண்டார். இந்த விருதை இயக்குநர் ராம் வழங்கினார்.

ராம் பேசுகையில், “இந்த விருதை இயக்குநர் மாரி செல்வராஜின் மனைவி திவ்யா வாங்குவது சிறந்ததாக இருக்கும்” என்றார்.

விருதைப் பெற்றுக்கொண்ட மாரி செல்வராஜ், “2005-ல் ராம் அவர்களுடன் உடன் பணியாற்ற ஆரம்பித்தேன். இப்போது அவர் கையால் இந்த விருதை வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது. விருதைக் கொடுத்த விகடனுக்கு நன்றி” என்றார்.

நடிகர் வடிவேலு, “விகடன் ஒரு அருமையான மேடை. இங்கு நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. முகம் சுளிக்காமல் என்னை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய ராஜ் கிரண் சாருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவர் எனக்குத் தாய், தந்தைக்குச் சமமானவர்.

அதேபோல இயக்குநர் ஆர்.பி.உதயக்குமாரும் எனக்கு நிறைய வாய்ப்பு கொடுத்தார். ஒவ்வொரு நடிகருடனும் என்னை நடிக்கவைத்தார். கமல் சாரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

இதை ஏன் இப்போது சொல்கிறேனென்றால், இயக்குநர் மாரி செல்வராஜ், அவரின் குரு ராம் கையால் இந்த விருது வாங்குவதைப் பார்க்கும்போது எனக்கு என்னுடைய குரு ராஜ்கிரண் சார் ஞாபகத்துக்கு வந்தார். என் கண்கள் கலங்குகிறது. ராம் சாரிடம் ஆபீஸ் பாயாக இருந்து, இன்று மிகப்பெரிய இயக்குநராக மாறியிருக்கிறார்.

உன் வாழ்க்கைதான் படத்துக்கான கதை என்று ராம் சார் மாரி செல்வராஜிடம் சொல்வராம். ராம் சார், இயக்குநர் மாரி செல்வராஜை மிகப்பெரிய உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார். ‘வாழை’ படத்தை எடுத்து மிகப்பெரிய அறுவடை செய்திருக்கிறார். இன்னும் மிகப்பெரிய உயரத்தகவர் அடைவார். பல வெற்றிகள் அவருக்குக் காத்திருக்கின்றன” என்றார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *