
தருமபுரி: தருமபுரி மாவட்டம் நாகாவதி அணை அருகே அரசு நகரப் பேருந்தும், தனியார் கல்லூரி பேருந்தும் மோதிய விபத்தில் 14 மாணவிகள் உட்பட 20 பேர் காயமடைந்தனர். வனப்பகுதி சாலையில் விபத்து அபாயம் நிலவுவதால் விபத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தருமபுரியில் இருந்து நல்லம்பள்ளி வழியாக நாகாவதி அணை பகுதிக்கு அரசு நகரப் பேருந்து இன்று(ஜூன் 13-ம் தேதி) காலை சென்று கொண்டிருந்தது. அணைக்கு சற்று முன்னதாக சென்றபோது, எதிரில் சின்னம்பள்ளியில் இருந்து நல்லம்பள்ளி நோக்கி தனியார் கல்லூரி பேருந்து , மாணவியருடன் வந்து கொண்டிருந்தது.