• June 13, 2025
  • NewsEditor
  • 0

வேலூர்: தமிழக மாங்காய் லோடு ஏற்றிய வாகனங்களை ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதால், அதிருப்தியடைந்த விவசாயிகள் பரதராமியில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, பெங்களூரா வகை மாங்காய் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பழச்சாறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 90 சதவீதம் மா விவசாயிகள் ஆந்திர மாநில பழச்சாறு தொழிற்சாலைகளை நம்பியே உள்ளனர். அதிக மகசூல் தரும் பெங்களூரா வகை மாங்காய்களை அறுவடை செய்ததும் லாரி, டிராக்டர்களில் ஏற்றி அனுப்பி வருவாய் ஈட்டி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *