
உதகை: நீலகிரி மாவட்டத்துக்கு மீண்டும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளதால், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஊட்டி வந்துள்ளனர்.
கடந்த மே மாத இறுதியில் நீலகிரி மாவட்டத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மரங்கள் விழுந்தும், மண் சரிவு ஏற்பட்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, ஆங்காங்கே லேசான சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில், நீலகிரி, கோவை மாவட்டங்களு க்கு சனிக் கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.