
மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கும், மாநாட்டு வளாகத்தில் மாதிரி அறுபடை வீடுகள் அமைத்து பூஜைகள் நடத்தவும் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டு வளாகத்தில் அறுபடை வீடுகளின் மாதிரி அமைத்து பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க போலீஸார் அனுமதி மறுத்து உத்தரவிட்டனர். இதையடுத்து மாதிரி அறுபடை வீடுகள் அமைக்க அனுமதி மறுத்து போலீஸார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், முருக பக்தர்கள் மாநாட்டுக்கு அனுமதி வழங்கவும் கோரி இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.