• June 13, 2025
  • NewsEditor
  • 0

அகமதாபாத்: விமானம் விபத்துக்குள்ளான பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதியின் உணவகக் கட்டிட கூரையிலிருந்து கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *