
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இரு குழுக்கள் இடையிலான மோதல் மற்றும் வன்முறை தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மகேஷ்தலா என்ற கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில் கடை கட்டுவது தொடர்பாக இரு குழுக்கள் இடையே நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இது வன்முறையாக மாறியது. இதில் பல வாகனங்கள் சேதம் அடைந்தன.
வன்முறையில் 5 பேர் காயம் அடைந்தனர். மேலும் வன்முறையை கட்டுப்படுத்த முயன்ற போலீஸார் சிலரும் காயம் அடைந்தனர். அப்பகுதியில் அமைதியை பராமரிக்க பிஎன்எஸ்எஸ் சட்டப் பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பட்டுள்ளது.