
அகமதாபாத்: விமான விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பேரழிவு நடந்த இடம் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிர் பிழைத்த 40 வயது விஷ்வாஸ் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.