
நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார்.
ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களின் கண்களிலிருந்து அவரின் முகம் மறைவதற்கு முன்பே, பெரும் அதிர்ச்சிகர செய்தியை உலகம் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறது.
ராஜஸ்தானின் அரபா துடாவதா கிராமத்தைச் சேர்ந்த மதன் சிங் ராஜ்புரோஹித்தின் மகள் குஷ்பு கன்வார். இவருக்கும், லூனியில் உள்ள கரபைரா புரோஹித்தைச் சேர்ந்த விபுல் சிங் ராஜ்புரோஹித்துக்கும் கடந்த ஜனவரி 18 அன்று திருமணம் நடந்தது. விபுல் சிங் ராஜ்புரோஹித் லண்டனில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.
திருமணம் முடிந்த சில வாரங்களிலேயே விபுல் சிங் ராஜ்புரோஹித் லண்டன் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதனால், விரைவில் மனைவி குஷ்பு கன்வாரையும் லண்டனுக்கு அழைத்துக்கொள்வதாகத் தெரிவித்திருக்கிறார்.
அந்த நாள் எப்போது வரும் எனக் காத்திருந்த குஷ்பு கன்வாருக்கு லண்டன் செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்தது. புதன்கிழமை மாமியார் வீட்டுக்குச் சென்று தங்கிவிட்டு, எல்லோரையும் சந்தித்து வாழ்த்துப் பெற்று, வியாழக்கிழமை விமானத்தில் புறப்பட்டார்.
5 महीने पहले ब्याही गई एक नई दुल्हन, 2 दिन पहले बना पासपोर्ट, और आज लंदन जाने के सपने के साथ अंतिम विदाई… ये राजस्थान कि खुशबू राजपुरोहित है, जिनकी शादी पांच महीने पहले हुई थी, अब ये पति से मिलने लंदन जा रही थी और उसी प्लेन में थी जो आज क्रैश हुआ है…#Rajasthan #Balotara… pic.twitter.com/fCwmlm7zPX
— Nedrick News (@nedricknews) June 12, 2025
இந்த நிலையில்தான் ஏர் இந்தியா விமான விபத்து நடந்தது. இறந்தவர்களில், ராஜஸ்தானைச் சேர்ந்த 12 பயணிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் பலோத்ராவைச் சேர்ந்த குஷ்பூவும் ஒருவர்.
இந்தச் செய்தி அவரின் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, அவரின் கிராமத்தாருக்கும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.