• June 13, 2025
  • NewsEditor
  • 0

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் புதிய படமான ‘சிதாரே ஜமீன் பர்’ வரும் ஜூன் 20-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.  இதையொட்டி இப்படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் பிஸியாக இருக்கிறார்.

ஆமீர் கான் நேர்காணல் ஒன்றில், “மகாபாரதம் எனது கனவுப் படம். அப்படத்திற்குப் பிறகு என்னால் வேறு எதையும் செய்ய முடியாது. ஆனால் நீங்கள் கேட்பதால், இதுதான் எனக்கு யோசிக்கக்கூடிய ஒரே விஷயமாக இருக்கிறது.

இதற்குப் பிறகு, நான் வேறு எதுவும் செய்யத் தேவையில்லை என்று நினைப்பேன்” என்று கூறியிருந்தார்.

இதையடுத்து இதுதான் ஆமீர் கானின் கடைசிப் படம் என்றும் அதன் பிறகு அவர் நடிக்க மாட்டார் என்றும் பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவின.

ஆமீர் கான்

தற்போது பாட்காஸ்ட் ஒன்றில் இதற்கு விளக்கமளித்திருக்கும் நடிகர் ஆமீர் கான், “மகாபாரதம் பல அடுக்குகள், உணர்ச்சிகளைக் கொண்டது. நீங்கள் உலகத்தில் பார்க்கும் அனைத்தையும் மகாபாரதத்தில் பார்ப்பீர்கள். மகாபாரதம் கதை பல ஆண்டுகளாக என்னிடம் இருக்கிறது.

அதனை திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது எப்போதும் எனது கனவாக இருந்தது என்பது உண்மைதான். என் வாழ்நாளில் அப்படத்தை எடுத்துவிட்டால் என் மனம் நிறைவடைந்ததாக உணர்வேன்.

ஆமீர் கான்
ஆமீர் கான்

ஆனால், அதுதான் என் கடைசிப் படம் என்று நான் எங்கும் சொல்லவில்லை. ஒருவேளை நான் அதை என் கனவுப் படம் என்று கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கலாம். நான் சினிமாவில் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *