• June 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் 50 சதவீதத்தை முழுமையாக மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநில ஒதுக்கீட்டின்கீழ் தமிழகத்தின் உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ இடங்கள் குறித்த ஒரு முக்கியமான பிரச்சினையை தங்களது அவசர கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, தமிழகத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில், உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடங்கள் தமிழகத்தில் அரசு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *