
புதுடெல்லி: தீ விபத்தில் பண மூட்டைகள் சிக்கிய விவகாரத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர உச்சநீதிமன்ற அறிக்கையை பகிரும்படி மத்திய அரசிடம் காங்கிரஸ் கூறியுள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் சில மாதங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது.
அப்போது ஒரு அறையில் எரிந்த நிலையில் பண மூட்டைகள் சிக்கிய விவகாரம் அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றம் இது குறித்து விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது. அந்த அறிக்கையில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது குற்றம்சாட்டப்பட்டதால், அவரை பதவி விலகும்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா கூறினார்.