
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் லண்டனுக்கு நேற்று மதியம் 1.38-க்கு புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானம் உயரே பறக்க முடியாமல் திணறி கீழே தரையிறங்கி மோதி தீப்பிழம்பாக வெடித்துச் சிதறியது. அதற்கு முன் அந்த விமானத்தின் பைலட் கேப்டன் சுமீத் சபர்வால், விமான கட்டுப்பாட்டு அறைக்கு ‘மேடே’ அழைப்பு விடுத்துள்ளார்.