
திடக்கழிவு மேலாண்மையில் திருப்பூர் மாநகராட்சி படுதோல்வி அடைந்திருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், கூட்டணியில் இருப்பதால் இந்த விஷயத்தில் மாநகராட்சிக்கு எதிராக வாய்திறக்க திமுக கூட்டணிக் கட்சிகள் தயங்குவதாக சர்ச்சை வெடித்திருக்கிறது.
திருப்பூர் மாநகரில் தினமும் சேகரமாகும் 700 டன்னுக்கும் அதிகமான குப்பைகளை காலம் காலமாக பாறைக்குழிகளில் நிரப்பி வருகிறது மாநகராட்சி. இந்த நிலையில், திருப்பூர் ஒன்றியம் காளம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் குப்பைகளைக் கொட்ட எதிர்ப்பு கிளம்பியிருப்பதால் மாற்று இடம் கிடைக்காமல் விழிபிதுங்கி நிற்கிறது மாநகராட்சி.