சீரியல்கள் மூலமாக நமக்குப் பரிச்சயமானவர் நடிகை அன்ஷிதா. கடந்தாண்டு விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ‘செல்லம்மா’ சீரியல் முடிந்த கையோடு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தார் அன்ஷித்தா.
பிக்பாஸ் வீட்டிலும் 50 நாட்களுக்கு மேல் இருந்து அதிரடியாக விளையாடியிருந்தார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த சில வாரங்களிலேயே விஜய் டி.வி-யின் ‘ஜோடி ஆர் யூ ரெடி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இப்படியான பரபரப்பாக வலம் வரும் அன்ஷிதா தற்போது சொந்தமாக வீடு ஒன்றை வாங்கி அதற்கு கிரகப்பிரவேசம் நடத்தியிருக்கிறார்.
சொந்த வீடு வாங்குவது அவருக்கு பெருங்கனவு என்பதைக் குறிப்பிட்டு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார் அன்ஷிதா.
அந்தப் பதிவில், “புதிய தொடக்கங்கள்! என் கனவு இல்லம். என்னுடைய கனவு நனவானது. இது வெறும் வீடு மட்டுமல்ல, இது கடவுளின் பரிசு மற்றும் ஒவ்வொரு தூக்கமில்லா இரவின், ஒவ்வொரு மௌன பிரார்த்தனையின் மற்றும் ஒவ்வொரு கடின உழைப்பின் பலன்.
எல்லா புயல்களிலும் என்னுடன் நின்றவர்களுக்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் என்னை உயர்த்தியது,” எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.
அன்ஷிதாவின் இந்தப் புதிய தொடக்கத்திற்கு அவருடைய மீடியா நண்பர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.