
சென்னை: வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவையின் தலைவராக கே.பாலு தொடர்வார் என்று பேரவையின் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் நீடித்து வரும் நிலையில், அன்புமணிக்கு ஆதரவாக செயல்படும் கட்சி நிர்வாகிகளை, ராமதாஸ் நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். இதுவரை கட்சியின் பொருளாளர் திலகபாமா உட்பட 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ராமதாஸ் நீக்கியுள்ளார். அதேநேரம், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதே பொறுப்பில் நியமனம் செய்து அன்புமணி கடிதம் வழங்கி வருகிறார்.