
சென்னை: ‘உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில், இன்று முதல் தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்திக்கிறார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத்தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. ஆளும் திமுக சார்பில் கடந்தாண்டே, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைக்கப்பட்டது. இக்குழுவினர், மாவட்ட வாரியாகவும், அணிகள் வாரியாகவும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியது.