
சென்னை: 2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்ற வேண்டும். குறிப்பாக, மாதந்தோறும் மின் அளவீடு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
மக்கள் விரோத கொள்கைகளை மத்திய அரசு கைவிட வேண்டும், தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பிரச்சார இயக்க நடைபயணம் பாரிமுனையில் நேற்று தொடங்கியது.