
சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் வழங்குகிறோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வழங்கிய கடிதத்தை அரசியல் நாகரிகம் கருதி வெளியிடவில்லை என்று கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி தேமுதிக மண்டல பொறுப்பாளர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று ஆலோசனை நடத்தினார். முதல்நாளில் தென்மண்டலத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் கட்சியின் அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும் தேர்தல் கூட்டணி நிலவரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டன.