• June 13, 2025
  • NewsEditor
  • 0

கோவையில் கடந்த ஏப்ரல் 27-ல் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. அன்றைய தினம் கோவைக்கு வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டுப் போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், அந்த நிகழ்ச்சிக்கு உதயநிதி வரவில்லை. அப்போது இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை முன்னிறுத்தி திமுக-வினர் நடத்திய தடாலடி வசூல் வேட்டை தெரிந்து தான் அந்த நிகழ்ச்சிக்கு வருவதாக இருந்த உதயநிதி வரவில்லை என இப்போது செய்திகள் கசிய ஆரம்பித்திருக்கின்றன.

கோவை செட்​டிப்​பாளை​யத்​தில் ஏப்​ரல் 27-ம் தேதி மாவட்ட நிர்​வாக​மும் தமி​ழர் பண்​பாட்டு ஜல்​லிக்​கட்​டுப் பேர​வை​யும் இணைந்து ஜல்​லிக்​கட்டு போட்​டிகளை பிரம்​மாண்​ட​மாக நடத்​தின. முன்​னாள் அமைச்​சர் செந்​தில்பாலாஜி தான் போட்​டியை தொடங்கி வைத்​தார். தமி​ழர் பண்​பாட்டு ஜல்​லிக்​கட்​டுப் பேரவை தலை​வ​ரும், கோவை தெற்கு மாவட்ட திமுக செய​லா​ள​ரு​மான தளபதி முருகேசன் தான் இதற்​கான முழு ஏற்​பாடு​களை​யும் செய்​தார். இந்த நிலை​யில், ஜல்​லிக்​கட்​டுப் போட்​டிகளுக்​காக வசூல் வேட்டை நடத்​தி​ய​தாக இப்​போது இவரைச் சுற்​றித்​தான் சர்ச்சை வெடித்​திருக்​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *