• June 13, 2025
  • NewsEditor
  • 0

மேட்டூர்: மேட்டூர் அணையின் வரலாற்றில் 92-வது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தார்.

மேட்டூரில் காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள மேட்டூர் அணை முழுக் கொள்ளளவை எட்டும் போது 93.47 டிஎம்சி நீர் இருப்பு இருக்கும் . மேட்டூர் அணையில் திறக்கப்படும் நீரைப் பயன்படுத்தி சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும் 16 மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *